பாஜக கட்சியைசேர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுக்குறித்த அவரது புகாரில், Snehan Foundation என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை கடந்த 23.12.2015 முதல் நடத்தி வருகிறேன். மேற்கூறிய அறக்கட்டள மத்திய அரசின் வருமான வரித்துறையால் அங்கிரிக்கப்பட்டு அதற்கு 1244 என்ற சான்றிதழும், u/s 80G 5 ( VI ) வரிவிலக்கும் வழங்கியுள்ளது . மேலும் ” Sneham Foundation என்ற பெயரில் PANCARD-ம் உள்ளது. நான் என்னுடைய ” Snehan Foundation” மூலம் தமிழ்நாடு முழுவதும் பல சேவை திட்டங்களை சிறப்பாக , சட்டத்திற்கு உட்பட்டு , எந்தவித புகாருமின்றி தற்போது வரை செய்து வருகிறேன். சமீப காலமாக என்னுடைய அறக்கட்டளை “Sneham Foundation” என்ற பெயரை தவறாக பயன்படுத்தும் சின்னத்திரை நடிகையும் மற்றும் வழக்கறிஞருமான ஜெயலட்சுமி என்பவர் தவறான விலாசம் கொடுத்து இணையதளத்தில் தான் தான் “Snehan Foundation” நிறுவனர் என்றும் “Sneham Foundation” பெயரில்பொது மக்களுக்கு அவர் நற்பணி செய்வதாகவும், அதற்கு இணையதளம் மூலம் எனக்கு சொந்தமான “Sneham Foundation” பெயரை பயன்படுத்தி, நிதி வசூலித்ததாக எனக்கு பல புகார்கள் வந்தது.பொது மக்களிடம் நிதி வசூலித்து பொதுச் சேவை செய்தால் அதற்கான உரிய கணக்குகளை நாம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நான் பொது பொது மக்களிடம் பொதுவெளித் தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை. மேற்கூறிய ஜெயலட்சுமி, “Snehan Foundatlon” பெயரை பயன்படுத்தி, நிதி வசூலித்ததாக எனக்கு வருமான வரித்துறையால் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். நானும் பொது தளங்களில் ஜெயலட்சுமி செய்துவரும் மோசடிகளை நான் பார்வையிட்ட போது, அவர் என்னுடைய அறக்கட்டளையின் பெயரில் இணையதளத்தில் தவறான விலாசம் மற்றும் விவரங்களை கொடுத்து பொது மக்களை ஏமாற்றி வருகிறார் என்ற விவரம் எனக்கு தெரியவந்தது.

நான் இது தொடர்பாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினால் அது விலாசம் தவறென்று தபால் துறையால் திருப்பி அனுப்பப்பட்டது. நான் நேரடியாக என்னுடைய மேலாளரை அனுப்பி விசரித்த போது, அந்த ”Snehan Foundation” என்ற என்ற பெயரில் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலாசம் போலியானதென்றும், போலியான விலாசத்தில் என்னுடைய அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து பொது மக்களை தனியாக சந்தித்து அவர்களை தன் வலையில் வீழ்த்தி பணத்தை பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து, பொது மக்களை பாதுகாக்க வேண்டுமென்றும், “Snehan Foundation” பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக ஜெயலட்சுமி மீது சட்ட நடவடிக்கை கோரியும், மேலும் அந்த போலியான இணைய தளத்தை முடக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெயலட்சுமி?
நடிகை ஜெயலட்சுமி பாஜகவை சேர்ந்தவர். ஏற்கெனவே இவர் மீது மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த மோசடி புகார் நிலுவையில் உள்ளது. இவர் சின்னத்திரையில் நடிகையாக இருந்தார். வெள்ளித் திரையில் துணை நடிகையாக சில படங்களில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
- 3500 கிலோ மீட்டர் நடைபயணம்… காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டம்!!காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த […]
- வரும் 1-ம் தேதி முதல் உயர்கிறது டோல் கட்டணம்..!தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் […]
- ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்துவிட முடியாது-கடம்பூர் ராஜூஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் […]
- இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார்இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசியுள்ளார்.அதிமுக பொதுக்குழு […]
- மதுரை வந்த ஓபிஎஸூக்கு உற்சாக வரவேற்புஅதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின் மதுரை வருகை புரிந்த ஓபிஎஸ்க்கு […]
- நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பம் […]
- சர்வாதிகார போக்குடன் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்சர்வாதிகார போக்குடன் சிலர் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என நிதி அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் […]
- ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்வு..! இன்று முதல் அமல்இந்தியா முழுவதும் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணம் உயர்த்துப்டு இன்று முதல் அமலுக்கு […]
- சுயநலமற்ற எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்பார்கள்.. டிடிவி பளிச்..!!சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். […]
- தமிழ்க்கடல் “நெல்லை கண்ணன்” காலமானார்..தமிழ்க்கடல் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் தன் 77வது வயதில் காலமானார். தமிழ் இலக்கியப் […]
- ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றங்களை வைத்த இபிஎஸ் …பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கிய பின் சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது, […]
- திவால் ஆகும் நிலையில் இந்திய வங்கிகள்?இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படலாம் என பொருளாதார வல்லூநர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தியாவில் வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் […]
- போலி ஆவண பத்திரப்பதிவு..,
அதிரடி காட்டிய சிவகாசி சார்பதிவாளர்..!போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிவகாசி சார்பதிவாளர் அறிவிப்பு […] - அண்ணன் ஓபிஎஸ்..இபிஎஸ் பரபரப்பு பேட்டிஅதிமுகவில் தற்போது எற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணன் ஓபிஎஸ் என இபிஎஸ் பேட்டி அளித்திருகிறார்.அதிமுக […]
- கேரளா சவாரி” செய்ய ரெடியா..???நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. […]