வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்
9ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .
இதனிடையில் அதிகபட்சமாக பேராவூரணியில் 5 செ.மீ மழையும், காவேரிப்பாக்கத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ,நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதேபோல், மேற்குத் தொடர்ச்சி மலை, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.