மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், கரந்தமலை சாமி, செல்லாயி அம்மன், மண்டு கருப்புசாமி, சப்த
கன்னிமார்கள் பங்குனி உற்சவ விழா நடைபெற்றது.
இதில், பக்தர்கள் பொங்கல் வைத்து அய்யனார் சுவாமிக்கு, கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கிடாய் வெட்டுதல், முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் நீராடுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, அய்யூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.