• Thu. Apr 25th, 2024

கனமழை காரணமாக கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்

ByA.Tamilselvan

Sep 1, 2022

கனமழை காரணமாக கேரளாவில் 8 மாவடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.இந்நிலையில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.திருவனந்தபுரம் ,கொல்லம், பத்தனம்திட்டா,ஆலப்பூழா,கோட்டயம்,எர்ணாகுளம், இடுக்கி, உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ,நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *