முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தவே இந்த ஆணையத்தை அப்போதைய முதல்வர் இபிஎஸ் அமைத்தார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இருப்பதை சட்டமன்றத்தில் வைத்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்போம் என்று கூறினார்.