ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில், கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இல்லத்தில் தங்கி உள்ள அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினார் பிறகு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தங்கியுள்ள அனைவரிடமும் பேசி, அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அதன் நிறுவனர் தஸ்துகீர் செய்திருந்தார்.