மின்கட்டணத்தை இனி ஆன்லைனில்மட்டுமே செலுத்தவேண்டும் என மின்சாரவாரியம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் மின் கட்டண உயர்வு அமலான நிலையில் ரூ2000 க்கும் அதிகமான பரிவர்த்தனையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும் என மின்சாரவாரியம் உத்தரவிட்டுள்ளது.இந்த புதிய நடைமுறையின் படி வசூல் மையத்தில் ரூ2000 வரையிலான கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.