அதிமுகவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எஸ்.பி.வேலுமணி புதிய வியூகத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி கட்டுப்பாட்டில் தான் ஒட்டுமொத்த கட்சியினரும் செயல்பட்டு இருக்கின்றனர். இவரது சிறப்பான செயல்பாடுகள் தான், கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக ஸ்வீப் வெற்றியை பெற்றது. ஆட்சியை இழந்தாலும் கோவையின் வெற்றி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிதும் ஆறுதல் அளித்தது.
கொங்கு மண்டல அதிமுக முழுவதும் எடப்பாடியின் கண் அசைவில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈபிஎஸ் ஆதரவாளராக வேலுமணி இருந்தாலும், கட்சியின் எந்தவொரு தலைவரையும் பகைத்து கொள்வதில்லை. ஏனெனில் தமிழகம் முழுவதும் தொழில் வளத்தை விரிவுபடுத்தி வைத்திருக்கும் வேலுமணி, அனைத்து தரப்பினரையும் அனுசரித்து செல்லவே விரும்புகிறார். தற்போதைய அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் எஸ்.பி.வேலுமணி தான் இருக்கிறார். சசிகலா சிறையில் இருந்த போது, அவர் தயவால் துணை முதல்வர் ஆகிவிடலாம் என்று கூட கணக்கு போட்டதாக பேச்சு அடிபட்டது. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு முக்கிய நகரங்களில் கவுன்சிலர்கள் வெற்றி பெற நிறைய செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது அவருக்கான ஆதரவு வட்டத்தை பெரிதுபடுத்தியுள்ளது. இதனை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவின் போது வேலுமணியை புகழ்ந்து பதவியேற்றதன் மூலம் புரிந்து கொள்ள முடிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தனிக்காட்டு ராஜாவாக திகழும் வேலுமணி, அதிமுக உட்கட்சி தேர்தலில் தனது ஆதரவாளர்களை களமிறக்கி கச்சிதமான வெற்றியை பெற வைத்துள்ளார்.
இதையடுத்து புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, பேரூராட்சி, நகரம், பகுதி மற்றும் வார்டு கழக செயலாளர்களாக போட்டியிட்டு தேர்வானவர்கள் கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான “இதய தெய்வம் மாளிகை”யில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து இன்று வாழ்த்து பெற்றனர்.
அப்போது புது வியூகத்தை கையிலெடுத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதை வெற்றிகரமாக முடிப்பார் என்று அதிமுக தொண்டர்கள் பேசுவதை கேட்க முடிந்தது. இதுபற்றி விசாரிக்கையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் அதிமுகவின் கை ஓங்கியது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது. அடுத்தகட்டமாக நாடாளுமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டு கோவையை கைப்பற்ற வேலுமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி முக்கியப் புள்ளிகளுடன் கைகோர்த்து செயல்பட பலே வியூகம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
- யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு..ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி […]
- இபிஎஸ் மனைவிக்கு கொரோனா..!தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]
- நடிகை அம்பிகா ராவ் மறைந்தார்…மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். இவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் […]
- அதிமுக பொதுக்குழு- இபிஎஸ் அதிரடி முடிவுஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் இபிஎஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.கடந்த ஜூன் 23ல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண […]
- பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களுக்கு நாடு முழுவதும்தடை..!இந்தியா முழுவதும், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு மத்திய […]
- விருப்ப ஓய்வில் புதிய முறை.. தமிழக அரசு அறிவிப்புதமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு […]
- ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டுமதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு. ஆட்டோவில் வந்த கும்பல் கைவரிசை .மதுரை […]
- மதுரை ரயில்வே மருத்துவமனையில் காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் […]
- அங்கன்வாடி ஊழியரின் மகனுக்கு ஃபேஸ்புக்கில் வேலைகூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை நிராகரித்த கொல்கத்தாவைச் சேர்ந்த அங்கான்வாடி ஊழியரின் மகன் […]
- கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்..? பட்டியலை வெளியிட்ட கூகுள்…2022-ம் ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை […]
- அதிமுக பொதுக்குழு ஏற்பாடு பணிகள் திடீர் நிறுத்தம்வரும் ஜூலை 11 அதிமுகபொதுக்குழு ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பு மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது […]
- சசிகலா-ஓ.பி.எஸ் சுவரொட்டிகள் கிழிப்பு -மதுரையில் பரபரப்புமதுரையில் சிசிகலா -ஓபிஎஸ் சுவரொட்டிகள் இபிஎஸ் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார்.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், […]
- தமிழகத்தை உலகமே உற்று நோக்குகிறது – ஸ்டாலின்செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவதால் உலகமே தமிழகத்தை உற்று நோக்கிறது என ஸ்டாலின் பேச்சுசென்னையில், […]
- மாஸ்க் போடலன்னா மது இல்ல..!சென்னையில் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் போடலன்னா மது இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிஷன் போட்டிருப்பது மதுப்பிரியர்களை […]
- காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐ கண்டித்து போராட்டம்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,சிவகங்கை […]