நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு காமன்மேன் என்று அறிவிக்கப்பட்டு டீசரும் சமீபத்தில் வெளியானது. இந்த தலைப்பிற்கு ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உரிமை கோரி சென்சார் போர்டிடம் முறையீடு செய்தது. சுசீந்திரன் உதவியாளர் பெயரில் இந்த தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படம் காமன்மேன். இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்க முடிவு செய்து காமன்மேன் என்ற தலைப்பும் வைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் இந்தத் தலைப்பின் உரிமை தங்களிடம் உள்ளதாக ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்றநிறுவனம் தென்னிந்திய திரைப்ட வர்த்தக சபையிடம் முறையீடு செய்தது.
டைரக்டர் சுசீந்திரனின் இணை இயக்குநர் விஜய் ஆனந்த் தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில் இவர் சார்பில் கடந்த 2018ல் காமன் மேன் என்ற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தலைப்பிற்கான உரிமை தங்களிடம் உள்ளதாகவும் ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் சேம்பர் கேட்டிருந்த நிலையில் பதில் வர தாமதமாகவே செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சசிக்குமார் நாயகனாக நடிக்கும் காமன் மேன் என்ற படத்தின் டீசரை வெளியிட்டது.
இதையடுத்து ஏஜிஆர் நிறுவனம் மீண்டும் பிலிம் சேம்பரை அணுகிய நிலையில், அந்த நிறுவனம் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சேம்பர் தெரிவித்தது. இதையடுத்து சென்சார் போர்டிடம் சட்டரீதியான நோட்டிஸை அந்நிறுவனம் அனுப்பியது.
இந்த விவகாரத்தில் தற்போது சென்சார் போர்ட், காமன்மேன் டைட்டிலை ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சசிக்குமாரின் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து சசிக்குமார் படத்தின் டைட்டில் மாற்றப்படுமா அல்லது மீண்டும் காமன் மேன் படத்தின் டைட்டிலுக்காக முட்டி மோதுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமீபத்தில் வெளியான சசிக்குமாரின் காமன் மேன் படத்தின் டீசர் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்களும் அந்த டைட்டிலில் பிக்ஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]