நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு காமன்மேன் என்று அறிவிக்கப்பட்டு டீசரும் சமீபத்தில் வெளியானது. இந்த தலைப்பிற்கு ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உரிமை கோரி சென்சார் போர்டிடம் முறையீடு செய்தது. சுசீந்திரன் உதவியாளர் பெயரில் இந்த தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படம் காமன்மேன். இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்க முடிவு செய்து காமன்மேன் என்ற தலைப்பும் வைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் இந்தத் தலைப்பின் உரிமை தங்களிடம் உள்ளதாக ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்றநிறுவனம் தென்னிந்திய திரைப்ட வர்த்தக சபையிடம் முறையீடு செய்தது.
டைரக்டர் சுசீந்திரனின் இணை இயக்குநர் விஜய் ஆனந்த் தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில் இவர் சார்பில் கடந்த 2018ல் காமன் மேன் என்ற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தலைப்பிற்கான உரிமை தங்களிடம் உள்ளதாகவும் ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் சேம்பர் கேட்டிருந்த நிலையில் பதில் வர தாமதமாகவே செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சசிக்குமார் நாயகனாக நடிக்கும் காமன் மேன் என்ற படத்தின் டீசரை வெளியிட்டது.
இதையடுத்து ஏஜிஆர் நிறுவனம் மீண்டும் பிலிம் சேம்பரை அணுகிய நிலையில், அந்த நிறுவனம் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சேம்பர் தெரிவித்தது. இதையடுத்து சென்சார் போர்டிடம் சட்டரீதியான நோட்டிஸை அந்நிறுவனம் அனுப்பியது.
இந்த விவகாரத்தில் தற்போது சென்சார் போர்ட், காமன்மேன் டைட்டிலை ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சசிக்குமாரின் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து சசிக்குமார் படத்தின் டைட்டில் மாற்றப்படுமா அல்லது மீண்டும் காமன் மேன் படத்தின் டைட்டிலுக்காக முட்டி மோதுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமீபத்தில் வெளியான சசிக்குமாரின் காமன் மேன் படத்தின் டீசர் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்களும் அந்த டைட்டிலில் பிக்ஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]