• Fri. Mar 24th, 2023

என். எம். ஆர். சுப்பராமன் காலமான தினம் இன்று..!

Byகாயத்ரி

Jan 25, 2022

காந்தியவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர் என். எம். ஆர். சுப்பராமன் . மதுரையில் நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், இராயலு அய்யர்-காவேரி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்.

காந்தியவழியில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ”மதுரை காந்தி“ என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர். 1923ல் காக்கிநாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு, மதுரை நகர் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

இதனால் இவரது இந்திய விடுதலை வேட்கை அதிமாக்கியது. 1930ல் மதுரை மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1934ல் மகாத்மா காந்தி நாடு முழுவதும் தீண்டாமைக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டார்.

அவரது பயணத்தில் காந்தியடிகள் மதுரை வருகையின் போது, என். எம். ஆர். சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். மகாத்மா காந்தி சுப்பராமனின் குடும்ப நண்பராக விளங்கினார். காந்தீய கொள்கைகளில், அரிசன முன்னேற்றத்தை தேர்ந்தேடுத்து இதற்காகவே தம்மை அர்பணித்துக் கொண்டவர்.

இவர் உருவாக்கிய தொண்டு நிறுவனங்கள் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக் கழகம், திண்டுக்கல், காந்தி அருங்காட்சியகம், மதுரை, காந்தி நிகேதன் ஆசிரமம், தே. கல்லுப்பட்டி உள்ளிட்ட பல.விடுதலைக்கு பாடுபட்ட என். எம். ஆர். சுப்பராமன் காலமான தினம் இன்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *