தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமான நிரோஷா ராதா, அதன்பிறகு பல வெற்றிப்படங்களிலும் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நிரோஷா ராதா. 1988முதல் ஆயிரத்து 1995 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
நிரோஷா ராதாவால் துவங்கப்பட்ட இந்த பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புதிய முயற்சியுடன் தனித்துவமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இன்னும் பல சிறந்த கம்பெனிகளுடன் இணைந்து நல்ல பல தயாரிப்புகளை இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.

ஸ்ரீலங்காவிலுள்ள ஸ்வர்ணவாஹிணி தொலைக்காட்சிக்காக 4 மெகா தொடர்களை நிரோஷா ராதா தானே தயாரித்தும் இயக்கியும் உள்ளார். அவரே தயாரித்து நாயகியாகவும் நடித்த ஷக்கலக்க பேபி தொடர் இலங்கை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயராலேயே ரசிகர்கள் மத்தியிலும் அழைக்கப்பட்டார். மேலும் தமிழில் பல முன்னணி சேனல்களில் உயிரே, ஆனந்தி போன்ற தொடர்களை தயாரித்து நடித்தும் உள்ளார்.
நிரோஷா ராதா எப்போதுமே விளையாட்டு போட்டிகளில் வேட்கை கொண்டவராகவே இருப்பவர் என்பதால் அந்த ஆர்வத்தில் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை அவர் துவங்கியுள்ளார். மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்பது சென்னையில் போரூருக்கு அருகிலுள்ள கோவூரில் அமைந்துள்ள உள்ள ஒரு டென்னிஸ் விளையாட்டு நகரத்தில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது..
மேலும் இது திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடவுள்ள டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி ஆகும். ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான 90 நட்சத்திரங்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். ஆறு கேப்டன்கள் இந்த குழுவை வழி நடத்த உள்ளார்கள்.
விஜய் டிவியிலிருந்து மாகாபா, சித்தார்த், சன் டிவியிலிருந்து ஆர்யன், அசார் மற்றும் கோலிசோடா புகழ் கிஷோர் உள்ளிட்டோர் இந்த நட்சத்திர அணியை வழி நடத்த இருக்கின்றனர் லீக் போட்டிகளில் விளையாட உள்ள இந்த அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் முன்னிலை வைக்கும் 2 அணிகள் அரையிறுதி போட்டிக்கும் அதை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கும் முன்னேறுவார்கள்.
இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் மற்றும் பல பரிசுப்பொருட்களும் வழங்கப்பட இருக்கிறது. இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த நிகழ்ச்சியை வழங்கும் எம்ஏஆர்சி (MARC)யுடன் இணைந்து வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையை வழங்க இருக்கிறார்.

- டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசிய ஓபிஎஸ் -ஆர் .பி. உதயகுமார்ஓ.பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் […]
- ஆளுக்கொரு பாதையில் பயணிக்கும் ஓபிஎஸ்,இபிஎஸ்,சசிகலாசசிகலா தமிழகம் முழவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல ஓபிஎஸ்,இபிஎஸ் ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் […]
- சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வுசர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா […]
- சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி […]
- குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். […]
- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]