டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் ஏப்ரல் 1 அன்று வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படத்தின்வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர் படத்தை உலகம் முழுவதும் வெளியிட்ட தயாரிப்பாளர்கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, ‘செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம்.ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும்.

கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப்படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன். இந்தப்படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு காட்சி போட்டுக்காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது” என்றார்.

- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]