• Fri. Jun 2nd, 2023

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் அனுசரிப்பு..!

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக நாம் தமிழர் கட்சி மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீவைத்து கொண்டு உயிர் நீத்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் திமுகவினர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் மலர்வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் நாம் தமிழர் கட்சியினர், மதிமுக, திருக்குறள் பேரவை, தமிழர் தேசிய முன்னணி, தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டபல்வேறு மலரஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *