மதுரை அழகர் கோயில் அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு மற்றும் சோலைமலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகளில் அமைச்சர் பெருமக்கள் பி.கே. சேகர்பாபு, . பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா இன்று (11.12.2022) வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, “1,000 திருக்கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயிலில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் தட்டோடு பதிக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணி, கைப்பிடிச் சுவர் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்ட திருப்பணிகள் முடிவுற்று, இன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆன்மிகப் பெருமக்கள், இறையன்பர்கள் மற்றும் பக்தகோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு வித்தக விநாயகர், அருள்மிகு முருகன், அருள்மிகு வேல் ஆகிய சன்னதிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய மரக்கதவுகள் தயார் செய்து சுமார் 250 கிலோ எடையிலான வெள்ளித் தகடுகள் பதிக்கும் திருப்பணியை அமைச்சர் பெருமக்கள் பி.கே. சேகர்பாபு, பி. மூர்த்தி, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் .இரா. கண்ணன், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் துணை ஆணையர் எம். ராமசாமி, சோலைமலை அருள்மிகு முருகன் கோயில் செயல் அலுவலர் . மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]
- மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாராநயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். […]