• Sat. Apr 27th, 2024

*உச்சநீதிமன்ற விசாரணையில் இன்று லக்கிம்பூர் விவகாரம்*

Byமதி

Oct 20, 2021

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி 2 வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது. இச்சூழ்நிலையில் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு அமைப்பு 6 புகைப்படங்களை வெளியிட்டு, அதில் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *