அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை.
புரட்சியாளர் சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று திருத்தங்கல் ரயில்வே அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.