பேரழகனே..,
நான் எதிர்பார்க்கவில்லை தான் கற்பனையில் வந்தவன் இன்று
எழிலாக வந்தான் கனவினிலே
வந்தவன் உதிர்த்தான்
உயிருக்குள் நீர் வார்க்கின்ற
ஒற்றை வார்த்தை
நேசத்தை ஏக்கத்துடனே
நெருங்கி அருகில் வந்தே
அன்பினில் அமிழ்ந்து
போய் பார்க்கும் முன்னரே
மோசம் போனேன்
திருவாய் மலர்ந்து சென்றான்
மோகனன் முட்டாள் தின’
வாழ்த்துக்கள் என்று
வசீகர சிரிப்பு என்
சுவாசத்தைப் பறிக்கவே…
பொய் கூட இன்று மெய்
சிலிர்க்க வைத்ததடா
நன்றி சொன்னேன் நான் அவனுக்கு
என் நிஜ நேசத்தை
நீடிக்கும் நினைவுகளில்
மேலும் ஒன்றை கூட்டியதால்
எது எப்படியோ முட்டாள் தின வாழ்த்துக்கள்
மொழிந்து செல்லவாவது
கனவினில் என்னருகினில்
வந்து அவன்
சென்றானே🌹🌹
கவிஞர் மேகலைமணியன்