நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால் தாவரவியல் பூங்கா,படகு இல்லம் உட்பட பல பகுதிகளில் உறைபனி பொழிவால் மினி காஷ்மீர் போல் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றது உதகை.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் காணப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், புல்வெளிகளில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது,
உதகையில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால் மினி காஷ்மீர் போல் காட்சி அளித்தது. மேலும் கடும் உறைப்பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைப் பனி சூழ்ந்து காணப்பட்டது, இதனால் வாகனங்களில் பெட்ரோல், டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக உறைபனியின் தாக்கம் வழக்கத்தைவிட இன்று அதிகரித்துள்ளதால் அதிகாலை விவசாயம் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் படைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
- பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதிமுர்மு
- 14வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
- நாட்டரசன்கோட்டை பெருமாள் வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்
- முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் உடனடியாக கைதாக நீதிமன்றம் உத்தரவு
- மாம்பழத்தை பழுக்க வைக்க வந்தாச்சு ஸ்பிரே
- தங்கம் விலை சரிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
- கள்ளழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்
- இன்று உலக புத்தக தினம் : ஜவாஹிருல்லா எம்எல்ஏ வாழ்த்து
- ஆடையில் நூதன முறையில் கருப்பு பணம் கடத்திய இளைஞர்
- பல்லடம் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை