• Thu. Apr 18th, 2024

புதினை கண்டித்து பேசிய ஜோபைடன்

ByA.Tamilselvan

Sep 22, 2022

அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஐ.நா சபை கூட்டத்தில்பேசும்போது ரஷ்ய அதிபர் புதினை கண்டித்து பேசியது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசும்போது, உலகம், ஒரு மனிதரால் (ரஷிய அதிபர் புதின்) தொடங்கப்பட்ட தேவையற்ற போரை சந்தித்தது. ரஷியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உக்ரைன் மீது போர் தொடுத்ததாக புதின் கூறுகிறார். ஆனால் யாரும் ரஷியாவை அச்சுறுத்தவில்லை. ஐரோப்பாவுக்கு எதிராக அனு ஆயுத அச்சுறுத்தல்களை புதின் விடுக்கிறார். ரஷியா, போர் குற்றததில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு உக்ரைனில் பலர் கொன்று புதைக்கப்பட்டு இருப்பதே சாட்சியம். அணு ஆயுத போரில் யாரும் வெற்றி பெற்று விட முடியாது. அதில் ஒருபோதும் ஈடுபட வேண்டாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *