ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் எங்களால் வாக்காளர்களை சந்திக்கவே முடியாத நிலையை திமுகவினர் ஏற்படுத்தி உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம் சாட்டினார்.
சேலத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மற்றும் துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்தி பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக மக்களை வதைப்பதாகவும் ; இந்த நடவடிக்கையால் திமுக கூட்டணி மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் ; இது கட்சியினருக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை காணாத வகையில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும்; இதுகுறித்து தேமுதிக உட்பட பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கிளியை கூண்டில் அடைத்தாலே அபராதம் விதிக்க சட்டம் இருக்கின்ற காலகட்டத்தில் வாக்காளர்களை திமுக கூட்டணியினர் அடைத்து வைத்திருப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய பிரேமலதா பரப்புரை களத்தில் தேமுதிக உட்பட பிற கட்சியினர் வாக்காளர்களின் சந்திக்க முடியாத நிலைக்கு திமுகவினரின் நடவடிக்கை உள்ளதாக தெரிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கூறியதை போல் மக்கள் அறத்தோடு வாக்களித்தால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் தேமுதிக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்த போதிலும் பன்னீர்செல்வம் தரப்பினர் இது தற்காலிகமானது என்று கூறி வருகின்றனர் எனவே அதிமுகவின் நிலை குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் பிரேமலதா கருத்து தெரிவித்தார்.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]