மதுரை சேது பொறியியல் கல்லூரியில் உற்பத்தி மற்றும் தெர்மல் துறைகளில் தற்போது உலக அளவில் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் சிறந்த தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய கருத்து அரங்கம் நடைபெற்றது
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பாக நிதி உதவி பெற்று இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கியது .கருத்தரங்கு துவக்க விழாவை கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் முகமதுஜலீல் தலைமையில் ,கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன் சீனிமுகமதுஅலியார்மரைக்காயர், நாசியாபாத்திமா.,நிலாபர்பாத்திமா ஆகியோர் முன்னிலை வகுத்தனர் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார் கருத்தரங்கில் மத்திய அரசின் டி ஆர் டி ஓ நிறுவனத்தின் முனைவர் ராமபிரபு .,சி .எஸ். ஐ ஆர் நிறுவனத்தின் முனைவர் சங்கரன்., முனைவர் பெண்டிக்ராகேஷ் ,சென்னை ஐஐடி பேராசிரியர் தன்மை பஸக், வேலூர் விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தராசு ஆகியோர் வளர்ந்து வரும் இயந்திரவியல் துறை ஆராய்ச்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.
இயந்திரவியல் துறை சார்பாக துவக்கப்பட்ட கருத்தரங்கில் ,கருத்தரங்கு மலரை கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.எம் .சீனி மொகைதீன் இணை முதன்மை நிர்வாக அதிகாரி எஸ் .எம் .சீனி முகம்மது அலியார் வெளியிட்டனர் பின்னர் கருத்தரங்கத்தில்உற்பத்தி மற்றும் தெர்மல் துறைகளில் தற்போது உலக அளவில் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் சிறந்த தொழில்நுட்பங்கள் குறித்து இந்த தேசிய கருத்து அரங்கம் நடைபெற்றது இக்கருத்தரங்கில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் ,ஐஐடி சென்னை மற்றும் இந்திய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் , பேராசிரியர்கள் தங்களின் ஆய்வு கட்டுரை கட்டுரைகளை சமர்ப்பிக்கிறார்கள். கருத்தரங்கு ஏற்பாட்டை துணை முதல்வர் சிவக்குமார் தலைமையில் இயந்திரவியல் துறை தலைவர் முத்துசுவாமி பேராசிரியர்கள் கைலாச கைலாசநாதன் ,அருண் பாலசுப்பிரமணியம், பரமசுவாமி மற்றும் துறை பேராசிரியர்கள் மாணவர்கள் செய்திருந்தனர் .
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]