தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் முகமது யாக்கூப் தலைமையில் புளியங்குடி ஹசனத்தில் சாரியா மண்டபத்தில் நடைபெற்றது. இதில்
இஸ்லாமியர்கள் உட்பட சிறுபான்மை சமூக மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நகர அனைத்து பகுதிகளுக்கும் முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி செய்தியாளர் ஜெபராஜ்