பிரபலங்கள் இப்போதெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி வருகின்றனர்.
நடிகர்கள், நடிகைகளின் விவாகரத்தை தொடர்ந்து, தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி இருப்பது அந்த பிரபல இயக்குநரின் விவாகரத்து விஷயம் தான்.
தனது மனைவியை இப்படி விவாகரத்து செய்ய காரணமே ஒரு அரசியல் தலைவரின் மகன் தான் என புதிதாக ஒரு தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
சினிமா பிரபலங்கள் மத்தியில் விவாகரத்து என்கிற வார்த்தையே டிரெண்டாகி விட்டது. சின்ன சின்ன ஈகோ பிரச்சனைக்கெல்லாம் பேசி முடிக்காமல் விவாகரத்தை அறிவித்து விட்டு பின்னர், எப்படி சேரலாம் என புலம்பி தவிப்பதே பலருக்கும் ஃபேஷனாகி போய் விட்டது. நடிகர்களை தொடர்ந்து இயக்குநர் ஒருவரும் தனது மனைவியை பிரிந்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் அந்த இயக்குநர். மேலும், இந்த விவாகரத்துக்கான காரணமும் அதுதான் எனக் கூறுகின்றனர். குடும்பத்தை கவனிக்காமல் சினிமாவிலேயே மூழ்கி கிடப்பது தான் பல சினிமா பிரபலங்களின் குடும்பங்களும் பிரிய காரணமாக இருக்கிறது. அதே போன்ற ஒரு விஷயம் தான் இந்த இயக்குநர் விஷயத்திலும் நடத்திருக்கிறது.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை பேசி தீர்க்க பஞ்சாயத்து பண்ண வந்த குடும்ப நண்பரான அந்த தென் மாவட்ட அரசியல் தலைவரின் வாரிசு தான் இருவரையும் பிரித்து வைத்து, அவரது மனைவியை தனது கஸ்டடியிலேயே வைத்து இருந்தாராம். இந்த விவாகரத்துக்கு முழு காரணமே அவர் தான் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது கசிந்து காட்டுத் தீயாக பரவி வருகிறது.
கணவரை கொஞ்சம் கூட அவரது மனைவிக்கு பிடிக்கவே இல்லையாம். தன்னையும் குடும்பத்தையும் கவனிக்காமல் சினிமாவே கதி என அந்த இயக்குநர் இருந்த நிலையில், அரசியல் தலைவரின் மகன் நட்பு குடும்பத்தில் விரிசல் ஏற்பட விவாகரத்துக்கு இதுதான் பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. சீக்கிரமே இந்த விஷயத்தில் பல பூதங்கள் கிளம்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை பிரச்சினைகள் கிளம்பினாலும் வெறும் நட்பு ரீதியான உறவுதான் என்று அந்தத்தரப்பில் கூறுகிறார்கள். தற்போது அந்த இயக்குநரின் மனைவி தனியாகத்தான் வசிப்பதாக சொல்கிறார்கள்.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]