உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான நீதியை பாஜக அரசு உறுதி செய்துள்ளது என்று கூறினார்.
நாட்டில் ஹிஜாப் குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் அரசு முஸ்லிம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கூறினார். மேலும், எதிர்க்கட்சிகள் வாக்குகளுக்காக முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு நீதியை பாஜக அரசு உறுதி செய்துள்ளது. ஆனால், நமது முஸ்லிம் சகோதரிகள் மோடியைப் புகழ்வதைப் பார்த்த எதிர்க்கட்சியினர் அவர்களைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். முஸ்லிம் பெண்கள் மோடியை புகழ்வதைத் தடுக்க, முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு இடையூறாக புதிய வழிகளைக் கொண்டு வருகிறார்கள்.’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘பாதிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் பெண்களுடணும் பாஜக அரசு ஆதரவாக நிற்கும் அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் அவர்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் முஸ்லிம் சகோதரிகளை ஏமாற்றுகிறார்கள், இதனால் முஸ்லிம் மகள்களின் வாழ்க்கை எப்போதும் பின்தங்கியுள்ளது’ என்று கூறினார். 2013ம் ஆண்டு முசாபர்நகர் கலவரம், 2017-ல் சஹாரன்பூரில் நடந்த வன்முறைகள் அரசியல் ஆதரவின் கீழ் மக்கள் எவ்வாறு குறிவைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்று என்று பிரதமர் மோடி கூறினார்.
எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசிய பிரதமர் மோடி, ‘உத்தரபிரதேசத்தை முன்னேற்றுபவர்களுக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைக் கலவரம் இல்லாமல் வைத்திருப்பவர்கள், நம் தாய் மற்றும் மகள்களை அச்சமின்றி வைத்திருப்பவர்கள், குற்றவாளிகளை சிறையில் அடைப்பவர்கள் யாரோ அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் போலியான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அவர்கள் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், உத்திரப்பிரதேசம் முழுவதும் இருளில் மூழ்கியது’ என்று கூறினார்.
சமாஜ்வாடி கட்சி வாரிசு அரசியல் மூலம் போலி சோசலிசத்தில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ‘சோசலிஸ்டுகளான லோகியா ஜி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ் குமார் அவர்களின் குடும்பத்தினரை அரசியலில் பார்க்க முடியுமா? சமாஸ்வாடியில் இருந்து 45 பேருக்கு சில பதவிகள் அளிக்க வேண்டும் என்று எனக்குக் கடிதம் வந்தது. இந்த வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என்றார்.
அரசாங்கத்திற்கு வியாபாரம் செய்வது வேலை இல்லை என்று கூறிய பிரதமர் மோடி, சிறு விவசாயிகள், சாலைகள் அமைப்பது, பொதுமக்களுக்கான இதர வசதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]