• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலைக்கு வருகிறார் நித்தி?

ByA.Tamilselvan

Jun 9, 2022

சர்ச்சை சாமியார்களில் முக்கியமானவர் நித்தியானந்தா.தமிழகம் ,கர்நாடகாவில் அவருக்கு ஏற்பட்டநெருக்கடி காரணமாக இந்தியாவை விட்டுவெளியேறினார். கைலாசா என்ற தனி நாடு உருவாக்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார் நித்தி.
கடந்த சில நாட்களாக கைலாசாவில் வசித்து வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியானது.தான் இறக்கவில்லை சமாதி நிலையில் உள்ளதாக கூறிஅவேரே கைப்பட எழுதிய கடிதம் வைரலானது. அவரது சொத்தை கைப்பற்ற அவரது சிஷ்யர்கள் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் நித்தியானந்தா மீண்டும் திருவண்ணாமலைக்கு வரப்போவதாகவும்,அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளன.குறிப்பாக வரும் பெளர்ணமிக்கு முன் நித்தியானந்தா திருவம்ணாமலைக்கு வருவார் என சொல்லப்படுகிறது.