• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Byமதன்

Jan 9, 2022

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் சுமார் 30 பேர் திடீர் என்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் டிஐஜி 17 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர். இந்த உத்தரவுகளை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

அதன்படி வேலூர் சரக டிஐஜி ஆக பணியாற்றி வந்த ஏ.ஜீ.பாபு பதவி உயர்வு பெற்று, திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னையில் டிஐஜி-யாக பணியாற்றி வந்த ஆனி விஜயா, வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்!