ஈரோடு கிராமப்புறத்தில் வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை குறைக்க ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தாரால் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரில் இரண்டாவது காசி என்று அழைக்கப்படும் காவிரி கரையில் சோளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மின் மயானம் ஈரோடு மாநகராட்சியும் மற்றும் ஈரோடு ரோட்டரி ஆத்மா மின் மயான அறக்கட்டளையும் இணைந்து கடந்த 14 ஆண்டுகளாக நகர்புற பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிராமப்புறத்தில் வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை குறைக்க அவர்கள் சேவை பெறும் வகையில் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தாரால் முடிவெடுக்கப்பட்டு, இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு சேவையை இன்று முதல் துவக்கி உள்ளனர்.
கிராமப்புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்ய வேண்டுமானால் ரூபாய் 15,000/- வரை செலவாகும் மற்றும் சுமார் 8 மணி நேரம் ஆகும். ரோட்டரி ஆத்மா எரியூட்டு வாகனம் மூலம் எரியூட்டும் போது ஒரு மணி நேரத்தில் எரியூட்டி அஸ்தி வழங்கப்படும்.இதனால் கிராமப்புற பொதுமக்கள் பயன் பெறுவார்கள். இதற்கு ரூபாய் 7,500/- மட்டும் எரியூட்டு கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தத் தொகையை Google Pay அல்லது Phonepe மூலம் செலுத்தலாம்.இந்த ஏரியூட்டு வாகனம் குறிப்பாக மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டும் எரியூட்டப்படும் என்பதை தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தை ரோட்டரி சங்க நன்கொடையாளர்கள் உதவியுடன் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
இந்த துவக்கவிழா நிகழ்ச்சி ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி. ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவரும் மற்றும் முன்னாள் ரோட்டரி ஆளுநருமான டாக்டர் சகாதேவன் முன்னிலை வகித்தார், ரோட்டரி மாவட்டம் 3203 ஆளுநர் பி.இளங்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை ஆத்மா அறக்கட்டளை செயலாளர் வி.கே. ராஜமாணிக்கம், பொருளாளர் எஸ். சரவணன் மற்றும் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ரு ஞானமுருகன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்கள் பதிவு செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண் (TOLL FREE NUMBER: 9655 719 666) தொடர்பு கொள்ளவும். பதிவு செய்யும் நபர்கள் உறுதிமொழி படிவம் மற்றும் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று ரோட்டரி ஆத்மா மின்மயான அறக்கட்டளை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது,
கிராமப்புற சேவை திட்ட எரியூட்டு வாகனத்தை எதிர்வரும் காலங்களில் தமிழக அரசுடன் ரோட்டரியும் இணைந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தலாம் என அரசிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்த திட்டம் உள்ளது
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]