‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்தியா முழுவதும் பெட்டிக் கடை,, டீக்கடை என எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டுள்ளது இதற்கு காரணமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை படத்தின் வெற்றி மகிழ்ச்சி அடைய செய்துள்ளது . முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கிய இப்படம் டிசம்பர் 17 அன்று பல மொழிகளில் வெளியானது.வணிகரீதியாக வெற்றிபெற்றுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தனது திரையுலக பயணத்தில் நடிகராக அவதாரம் எடுக்க இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தை சந்தித்த போதுபடத்தின் இசை மற்றும் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்
ஐந்து மொழிகளிலும் புஷ்பாவின் பாடல்கள் வெற்றிபெற்றுள்ளன. எப்படி உணர்கிறீர்கள்?

உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு பாடலையும் முடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. குறிப்பிட்ட மொழிக்கு ஏற்ற பாடகர்களை கவனமாக தேர்வு செய்தேன்.ஓ சொல்றியா’ பாடலை தமிழில் பாடிய ஆண்ட்ரியா படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோதிலும் அனுமதி பெற்று வந்து பாடிக் கொடுத்தார். கவிஞர் விவேகா பாடல் வரிகளை சிறப்பாக வடிவமைத்தார்.
‘ஸ்ரீவள்ளி’ பாடலைப் பாடுவதில் சித் ஸ்ரீராம் மிகுந்த ஆர்வம் காட்டினார். இது டப்பிங் படம் அல்ல, அகில இந்திய படம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அதற்குண்டான தரம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் என்றவரிடம்
வெற்றியை எப்படிக் கையாளுகிறீர்கள்?
வெற்றியோ தோல்வியோ எப்பொழுதும் நான் அதை என் இதயத்திற்கு மட்டுமே எடுத்து செல்வேன், தலைக்கு அல்ல. எல்லாப் பாடல்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பை அளிக்கிறோம். சில பாடல்கள் ஹிட் ஆகின்றன, சில பாடல்கள் ஹிட் ஆவதில்லை. இரண்டிற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். உண்மையாகவும் கடுமையாகவும் உழைப்பது மட்டுமே நமது கைகளில் உள்ளது.
சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுனுடனான உங்களின் கெமிஸ்ட்ரி பற்றி…
அல்லு அர்ஜூனும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள நடிகர். அவரது வெற்றியை நான் கொண்டாடுகிறேன், எனது வளர்ச்சியை கண்டு அவர் ஆனந்தப்படுகிறார். தமிழ் சினிமாவை நோக்கி அவரைத் நகர்த்திய முக்கிய நபர்களில் நானும் ஒருவன். முக்கியமான ஒரு சில முடிவுகள் எடுக்கும் முன்பாக அவர் என்னுடன் ஆலோசிப்பதும் உண்டு.
தமிழகத்தில் புஷ்பாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மேலும் மகிழ்ச்சி. சுகுமார் எனக்கு அண்ணன் மாதிரி. நான் சந்தித்த அன்பான மனிதர்களில் அவரும் ஒருவர். அவர் மிகவும் மென்மையாக பழகக்கூடியவர். எங்கள் மூவருக்கும் பரஸ்பர புரிதல் உள்ளது, நாங்கள் பணியாற்றும் திரைப்படங்களில் அது பிரதிபலிக்கிறது.
புஷ்பா’ படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் உங்களுக்கு எந்தளவு சுதந்திரம் இருந்தது?
சுகுமாரைப் பொறுத்த வரையில் அவர் முழுமையான படைப்பு சுதந்திரத்தை அளிக்கிறார். பின்னணி இசை பணிகளின் போது, அவரால் வர முடியவில்லை. ரெக்கார்டிங் முடிந்தவுடன் அனுப்புங்கள் என்று சொன்னார். அந்த அளவுக்கு என் வேலையில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.இது ஒரு புதிய முயற்சி என்பதால் பின்னணி இசையை அவர் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அதை அனுப்பினால் போதும் என்று அவர் வலியுறுத்தியோடு, வெகு சில சிறிய மாற்றங்களை மட்டுமே சொன்னார். நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம்.
இப்போதெல்லாம் பாடல்களே இல்லாமல் சில படங்கள் வெளியாகின்றன. நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
உலக அளவில் இசைக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்டு படங்களில் பாடல்கள் இல்லை. ஆனால் திரைப்படத்திலிருந்து இசையை பிரிக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பாடல்கள் பார்வையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட உணர்வைத் தருகின்றன, மேலும் அவர்களை படத்துடன் ஒன்ற உதவுகின்றன. பாடல்கள் இல்லாத திரைப்படங்களை நான் ரசிக்கிறேன், ஆனால் அதிக ஆற்றலையும் இணைப்பையும் கொண்டு வரும் பாடல்களைக் கொண்ட படங்களை தான் நான் இன்னும் விரும்புகிறேன்.
முன்பெல்லாம் பாடல்கள் மொழியின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டன. இது இப்போது மாறிவிட்டதாகத் தெரிகிறதா?
இசைக்கு மொழி இல்லை என்று கூறப்படுகிறது. உண்மையில் இசைக்கு மொழி இல்லை, ஆனால் பாடல் வரிகள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்துடன் இணைக்கின்றன. நம் நாட்டில் பல மொழிகள் இருப்பதால், ஒரு பாடல் அனைவரையும் சென்றடைவது கடினம். நான் உருவாக்கும் பாடல்களை அனைத்து மாநில மக்களும் ரசிக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக்கொள்கிறேன்.
நீங்கள் ஒரு இசை இயக்குநரா அல்லது இசையமைப்பாளரா?
நான் ஒரு இசை ரசிகன், இளையராஜாவின் பக்தன் என்று கூட சொல்லலாம். அவர் எனக்கு கடவுள் போன்றவர், ஒரு படத்திற்கு பின்னணி இசை எப்படி அமைக்க வேண்டும் என்பதை மாற்றி அமைத்தவர் அவர். பாடல்களுக்கு எந்தளவும் குறையாத முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் வழங்குவதையே நான் விரும்புகிறேன்.
அகில இந்திய திரைப்படங்கள் பற்றிய உங்களது பார்வை?
பெயரும் புகழும் பெறத்தான் இந்தத் துறைக்கு வருகிறோம். அதற்கு பிராந்திய கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. இந்தித் திரைப்படங்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதால் அவை அகில இந்திய படங்கள் என்று அழைக்கப்படுவதில்லை. பிராந்திய சினிமாக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் சமீபகாலமாக பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா போன்ற படங்கள் மூலம் இது மாறி வருகிறது. நாம் ஏன் ஒரு பிராந்தியத்திற்குள் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்? அகில இந்திய படம் என்ற வார்த்தை விரைவில் மறைந்து, அனைத்து இந்தியாவுக்கான படமாக மாறி பின்னர் உலக சினிமாவாக மாறும்.
உங்களை எப்போது ஹீரோவாக பார்க்க முடியும்?
இசையமைப்பாளராக இருப்பது மட்டுமே எனது இலக்காக இருந்தது, அதனால்தான் ஆரம்பத்தில் நடிப்பதற்கு வந்த சில வாய்ப்புகளை மறுத்தேன். ஆனால் கொரோனா பெருந்தொற்று காலம் என் மனதை மாற்றிவிட்டது. அந்த காலம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அதனால் மிக விரைவில் நடிகராக அறிமுகம் ஆக இருக்கிறேன். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன என்றார்.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]