• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும்

Byவிஷா

Apr 30, 2025

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்குவதற்கான பணிகளி மிக விரைவாக நடைபெற்று வருவதால், 2028ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படுத்துகிறது.
இதன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 2028-ம் ஆண்டுக்குள் புல்லட் ரயில் இயக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த புல்லட் ரயிலானது மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.