கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதாரஅமைப்பு வெளியிட்ட தகவலின்படி இப்போதுவரை வைரஸ் பாதிப்பால் உலகம் முழுதும் 62,43,000 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். இதில் இந்தியாவை பொறுத்தவரையிலும் நாடு முழுதும் இதுவரையிலும் 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே பல நாடுகளில் நிகழ்ந்த கொரோனா இறப்புகள் தொடர்பாக கணிதமாதிரி மதிப்பீட்டின்படி உலகசுகாதார அமைப்பானது ஆய்வுகளை மேற்கொண்டது. இந்தநிலையில் அதன் ஆய்வுமுடிவுகளை உலக சுகாதார அமைப்பானது வெளியிட்டு இருக்கிறது.
அதாவது, உலகளவில் கொரோனா பாதிப்பால் அதிக இறப்புகளை சந்தித்தநாடு இந்தியா என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உலகம் முழுதும் கடந்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கொரோனா பாதிப்பால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா குறித்த அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்துள்ளது. சென்ற 2020 ஜனவரி-2021 டிசம்பர் வரை இந்தியாவில் கொரோனா காரணமாக மொத்தம் 47,29,548 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக 10 லட்சத்து 72 ஆயிரத்து 510 உயிரிழப்புகளுடன் ரஷ்யா 2-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா தாக்கம் உயிரிழப்பு கணக்கீட்டில் கணித மாதிரி மதிப்பீட்டை பயன்படுத்தும் உலகசுகாதார அமைப்பின் நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தது வந்தது. இதனிடையில் உலக சுகாதார அமைப்பு ஆய்வில் முதல் அடுக்கு நாடுகளிலிருந்து ( அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை ) நேரடியாக பெறப்பட்ட இறப்பு புள்ளி விபரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தியா உள்ளிட்ட 2ஆம் அடுக்கு நாடுகளுக்கு கணித மாதிரி செயல்முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா இந்த வழிமுறையை எதிர்க்கிறது என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த கணக்கீட்டின் வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் பெறப்பட்ட தகர்வுகளை கொண்டு உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை இந்தியா நிராகரித்து இருக்கிறது.
- பொது அறிவு வினா விடைகள்1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? – 1935 தமிழகத்தில் […]
- இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!இராமேஸ்வரம் புண்ணிய பூமி இராமேஸ்வரம் தல வரலாறு ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து […]
- மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆரம்ப […]
- திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு […]
- திண்டுக்கல்லில் திமுக பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களால் விரட்டி அடிப்பு!திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் விடாமல் தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த […]
- பழனியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான […]
- ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கைஇணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தமிழகஅரசு தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் […]
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]