• Wed. May 8th, 2024

சுரண்டையில், திமுகவில் இணைந்த அதிமுகவினர்!

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சுரண்டை நகர திமுக நிர்வாகிகளுடன் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அதிமுகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் சீனி துரை, அன்பழகன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *