தட்டச்சு தேர்வின் போது கேட்ஜட் கோளாறு ஏற்படும் போது மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்த வேண்டும் – தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை.
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. இதில் மதுரை, சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சுருக்கெழுத்து தேர்வில்(Audio System) பழுதடைந்து மாணவர்கள் தகுந்த நிவாரணம் தேர்வு அன்றே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நடைமுறைபடுத்தாத காரணத்தினால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக கடந்த 2 தேர்வுகளில் பாதிப்பு அடைந்துள்ளது. பாதிப்படைந்தால் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்விற்காக அந்தந்த மாவட்டத்திலே மையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும், சுருக்கெழுத்து தேர்வில் இரண்டே நிமிட மாதிரி டிக்டேசனுக்கு பதிலாக அரசுத் தேர்வில் பின்பற்றப்படும் 7 நிமிட மாதிரி டிக்டேசன் அளிக்க வேண்டும், சுருக்கெழுத்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு திருச்சி மாவட்டத்திலும் மையம் அமைத்திட வேண்டும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு சான்றிதழ்களில் அனைத்து நிலைகளிலும் மாணவர்களுடைய புகைப்படம் அமைய வேண்டும், பள்ளி பொதுத்தேர்வு போல தட்டச்சு மாணவர்களின் சான்றிதழ்களில் அவர் பயின்ற தட்டச்சு பள்ளியின் பெயரையும் அச்சிடவேண்டும் உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் ரவிசந்திரன் பேசுகையில்:
தொழில்நுட்ப கல்வியியல் இயக்ககத்தின் சார்பில் நடத்தப்பட்ட கடந்த 4 தேர்வுகளுக்கான சிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், தட்டச்சு தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தேர்வின் போது கேட்ஜட் கோளாறு ஏற்படும் போது மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், கணினி தேர்விலும் விடைத்தாள் திருத்தும் பணியில் தகுதியும் அனுபவமும் பெற்ற தட்டச்சு பள்ளி ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]