
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் மாநில பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கூறினார்
பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களால் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநில பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கூறினார் ..மதுரை மாநகர் மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு பேரியக்க நிகழ்ச்சியையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்து பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ..பிரதமர் மோடி தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சவால்கள் பிரச்சினைகளை சந்தித்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளார் . இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்கள் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்துள்ளனர் .பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டு ஆட்சி காலத்தில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை .பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 6000 வழங்கி வருகிறார். ஆனால் தமிழக அரசு ஏழை மக்களுக்கு பொங்கல் இனாம் வழங்கி ஏமாற்றி வருகிறது . இந்தியா சீனாவை விட இரண்டு மடங்கு டிஜிட்டல் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது . காங்கிரஸ் கட்சியின் பல்வேறு விமர்சனங்களை தாண்டி மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வழங்கிய சீனாவுக்கு இந்தியா இலவச மருந்து மற்றும் உணவுப்பொருள் வழங்கியது . மேலும் கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து 38 மாதங்கள் இலவச உணவு வழங்கி பொதுமக்களை காப்பாற்றி உள்ளார் . மத்திய அரசு சார்பில் விருதுநகரில் ரூபாய் 2000 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கியுள்ள ஜவுளி பூங்காவை திமுக தனது திட்டம் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டுக்காக ஜப்பான் சென்றுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் . இந்தியாவின் பெருமையை வெளிநாடுகளில் ராகுல் காந்தி தரக்குறைவாக பேசி விமர்சித்து வருவது கண்டிக்க தக்க செயலாகும் . புதிய பாராளுமன்ற கட்டிடத்தை 19 எதிர்கட்சிகள் புறக்கணித்தனர். அவர்கள் மறுபடியும் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு வாய்ப்பு கிடைக்காது. இந்திய அளவில் பாஜகவை எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் நிலைமை காமெடியன்கள் போன்று உள்ளது .பிரதமர் மோடி மீது வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்து வருகின்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. ஆனால் அதே வேளையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பினால் உடனடியாக பாஜக கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்படுவது கண்டனத்துக்குரியதாகும். மதுரை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 2000 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அரசின் நலத்திட்டங்களால் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது . இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொது செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், ராஜ்குமார், துணைத்தலைவர் ஜெயவேல், இணை பொருளாளர் சத்தியம் செந்தில்குமார், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இருந்தனர்..
- சிவகாசி அருகே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த, 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு சீல்…..சிவகாசி அருகே, பட்டாசு விற்பனை கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த … Read more
- வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம்..,பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்படி, பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி, மதுரை மண்டல பேரூராட்சிகளின் … Read more
- 26 வருடங்களாக ஆளில்லாமல் இருக்கும் தாய்லாந்தின் ‘சந்திரமுகி’ பங்களா..!சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான பாங்காக்கில் பல ஆண்டுகளாக ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் … Read more
- லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து..!இன்று நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து … Read more
- இன்று தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீடு..!தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் … Read more
- தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!தமிழகத்தில் இன்று முதல் காலாண்டு தேர்வு முடிவடையும் நிலையில், நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக … Read more
- இன்று முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை … Read more
- இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு 4 … Read more
- தமிழகத்தில் அக்.2ல் கிராமசபைக் கூட்டம்..!தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என … Read more
- வருகிறது சென்னை புறநகரில் புதிய தீம் பார்க்..!தமிழகத்தில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய தீம் பார்க் வர இருப்பதாக அரசு … Read more
- உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் … Read more
- பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை ..? ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ … Read more
- பொது அறிவு வினா விடைகள்