• Sun. Mar 16th, 2025

எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை – ஓபிஎஸ் பேட்டி…

ByKalamegam Viswanathan

Feb 17, 2025

பிளவுபட்ட அதிமுக ஒன்று பட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தலைவர்களின் படம் இல்லாத நிலையில் அந்த எண்ணத்தை செங்கோட்டையன் பிரதிபலிக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி..

OPS ஆறு மாதம் அமைதியாக இருந்தால் கட்சியில் இணைத்து கொள்வோம்? MLA ராஜன் செல்லப்பா

அண்ணன் ராஜன் செல்லப்பா அவர்கள். நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்களா..? என்ன காரணத்துக்காக அவர் சொன்னார் என்று தெரியவில்லை.

இந்த பிரச்சனை யாரால் உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

எந்த சூழ்நிலையிலும் கட்சி பிரிந்து இருக்கின்ற அதிமுக சக்திகளை ஒன்றிணைய வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன். என்னை அழைத்துக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என சொல்லவில்லை..

எனக்காக அவர் சிபாரிசு செய்கிறார் என்று சொல்கிறார். எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை.

பிரிந்து கிடக்கின்ற அதிமுகவை இணைந்து செயல்பட்டால் தான் இனிவரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கின்ற சக்தி உருவாக்க வேண்டும் என்றுதான் சொல்லி கொண்டிருக்கிறேன். எனக்கு சிபாரி செய்கின்ற நோக்கத்தில் அவர் பேசுகிறார். எங்களை அழைத்துக் கொண்டு போய் பேச வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை சொல்லவும் மாட்டோம்.

முன்னாள் அதிமுக MP ரவீந்திரநாத் பற்றி தெரியாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியது?

உதயகுமார் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர் வெங்கடேசன் வீட்டில் எனது மகனுக்கு பேரவையில் மாவட்ட பதவி வழங்க கூறிய போது.., எங்கே உட்கார்ந்தார் என்று சொன்னால் அது அரசியல் அநாகரிகம்.

மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு?

நான் முதலமைச்சராக இருந்தபோது மும்மொழி கொள்கையை பற்றி எங்களுடைய தலைய கொள்கையை இரு மொழிக் கொள்கைதான்.. உறுதியாக சொல்கிறோம் என தெரிவித்தோம். திராவிட இயக்கங்களை பொறுத்தவரை தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான். தேர்தலுக்கு முன் மீண்டும் தொண்டர்களை சந்திப்பீர்களா?

சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்திக்க செல்வோம். மெகா கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி கூறியதற்கு சிரித்தப்படியே பதில் சொன்னார். நல்ல நகைச்சுவை

எம்ஜிஆர் இறந்த பின்பு இரண்டு அணியாக பிரிந்தோம். தலைவர்கள் ஒன்று சேர்வதற்கு முன்பு தொண்டர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அதை பார்த்து தான் தலைவர்களே ஒன்று சேர்ந்தார்கள்.

இணையாமல் வெற்றி பெற முடியாது என்பதுதான் மக்களின் 11 தேர்தல்களின் தீர்ப்பு. மக்களின் எண்ணம்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு?

இரண்டு முறை அமைச்சர் ஏழுமுறை சட்டமன்ற உறுப்பினர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவிடம் மிகுந்த பற்று கொண்டவர்.
அதிமுக இரண்டு தலைவர்களின் படங்கள் இல்லை என்று சொன்னால் தொண்டர்கள் வெதும்பி கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி ஆர்,ஜெயலலிதா மொத்த உருவம் எடப்பாடி என்ற கேள்விக்கு?

நகைச்சுவையா கேக்குறீங்க? என சிரித்தபடி Ops புறப்பட்டு சென்றார்.