மதுரை முனியாண்டிபுரத்தில் குடும்ப தகராறில் திம்ஸ் கட்டையால் கர்ப்பிணிப் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது – திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு.
திருமணமாகி ஆறு மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று மாதம் கர்ப்பிணியான தனது மனைவியை கட்டிட தொழிலுக்கு பயன்படுத்தும் திம்ஸ் கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த கணவனை கைது செய்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட முனியாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சதிஷ் கட்டிட வேலை மற்றும் பணிகள் இல்லாத போது டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தேனியைச் சேர்ந்த ரம்யா (22) என்ற பெண்ணுடன் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ரம்யா 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். சதீஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் மேலும்., சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் ரம்யா கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். பிரிந்து சென்ற ரம்யாவை நேற்று குடும்பத்தார் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று வீட்டிற்கு வந்த ரம்யா உடன் சதீஷ் இன்று மறுபடியும் தகராறு செய்துள்ளார் . தொடர்ந்து., கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றி மனைவி ரம்யாவை அடித்துள்ளார். தொடர்ந்து சண்டையிட்ட சதிஷ் ஆத்திரம் தீராமல் தனது வீட்டில் வைத்திருந்த கட்டிடப் பணிகளில் தரையை சமப்படுத்தும் திம்ஸ் கட்டை என்று சொல்லக்கூடிய இரும்பு கம்பியை கொண்டு மனைவியை தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே மயங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரம்யா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து., உடனடியாக சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இறந்த ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்த சதீஷை போலீசார் கைது செய்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் மனைவியை கணவனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]