• Thu. Apr 25th, 2024

மதுரையில் கர்ப்பிணிப் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

ByKalamegam Viswanathan

May 6, 2023

மதுரை முனியாண்டிபுரத்தில் குடும்ப தகராறில் திம்ஸ் கட்டையால் கர்ப்பிணிப் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது – திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு.
திருமணமாகி ஆறு மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று மாதம் கர்ப்பிணியான தனது மனைவியை கட்டிட தொழிலுக்கு பயன்படுத்தும் திம்ஸ் கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த கணவனை கைது செய்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட முனியாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சதிஷ் கட்டிட வேலை மற்றும் பணிகள் இல்லாத போது டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தேனியைச் சேர்ந்த ரம்யா (22) என்ற பெண்ணுடன் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ரம்யா 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். சதீஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் மேலும்., சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் ரம்யா கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். பிரிந்து சென்ற ரம்யாவை நேற்று குடும்பத்தார் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று வீட்டிற்கு வந்த ரம்யா உடன் சதீஷ் இன்று மறுபடியும் தகராறு செய்துள்ளார் . தொடர்ந்து., கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றி மனைவி ரம்யாவை அடித்துள்ளார். தொடர்ந்து சண்டையிட்ட சதிஷ் ஆத்திரம் தீராமல் தனது வீட்டில் வைத்திருந்த கட்டிடப் பணிகளில் தரையை சமப்படுத்தும் திம்ஸ் கட்டை என்று சொல்லக்கூடிய இரும்பு கம்பியை கொண்டு மனைவியை தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே மயங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.


ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரம்யா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து., உடனடியாக சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இறந்த ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்த சதீஷை போலீசார் கைது செய்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் மனைவியை கணவனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *