சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போல் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுரை ஈரோடு கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை ஆரம்பித்த கனமழை விடிய விடிய பொழிந்து வந்தது. அதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்திருக்கின்றார். பேருந்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.