• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்ற வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லஞ்ச புகாரில் சிக்கிய முன்னாள் டிஜிபி சத்யநாராயண ராவ், எஸ்.பி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிறைத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடவடிக்கை எடுக்காதது பற்றி கர்நாடக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 30 நாட்களுக்குள் காவல்துறை அதிகாரிகள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசின் முதன்மை செயலாளர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.