கடந்த இரண்டு நாட்களாக குன்னூரில் காலை மற்றும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மேக மூட்டம் காணப்பட்டு வந்தது.
மாலை நேரத்தில் சிறிது நேரம் பேரக்ஸ், குன்னூர், பெட்போர்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைப் பெய்த நிலையில், திடீரென நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.