விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இது சிம்புவின் 47-வது படம். தாமரை பாடல்களை எழுதுகிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் இப்படம் முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூரில் தொடங்கிய நிலையில் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை, படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதில், கெளதம் மேனன் உள்ளிட்டப் படக்குழுவுடன் சிம்பு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘விரைவில் மும்பையில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சண்டைக் காட்சிகள் சூப்பராக வந்துள்ளது. இந்த சண்டைக் காட்சி சிம்பு ரசிகர்களுக்கு திரையில் விருந்தாக இருக்கும்” என்று டுவிட் செய்துள்ளனர்.