• Sat. Apr 27th, 2024

கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ள மட்டுமில்லாமல், ஒரே நாளில் 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 4,45,385 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 81,85,13,827 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 96,46,778 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *