கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட 23% அதிகம் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்துள்ளது நாட்டின் பொருளாதாரம் சிறப்பான பாதையில் உள்ளதை காட்டுவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வசூல் பணத்தை கொடுக்காமல் ஒன்றிய அரசு போக்குக்காட்டி வருவது அதிருப்பதியை ஏற்படுத்தி வருகிறது.