• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் நகரில், அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ByN.Ravi

Aug 15, 2024

மதுரை, சோழவந்தான் பேரூர் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் பேரூர் கழகஅதிமுக சார்பில் சோழவந்தான் பேட்டையில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், தமிழரசன், மகேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி காளிதாஸ்,மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், வழக்கறிஞர் திருப்பதி, அம்மா பேரவை துரை தன்ராஜ், இளைஞர் அணி கவி காசிமாயன், மாணவரணி மகேந்திர பாண்டிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, ஆர்.பி.உதயகுமார், புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றியக் கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி,பேரூர் கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், சண்முக பாண்டிய ராஜா, நிர்வாகிகள் மருத்துவர்
அணி கருப்பட்டி கருப்பையா,பொதுக்குழு நாகராஜ், அவைத் தலைவர் முனியாண்டி, பட்டணம் என்ற நயினார் முகமது, மகளிர் அணி லட்சுமி ,வனிதா, முன்னாள் சேர்மன்எம். கே. முருகேசன், இளைஞர் அணிதண்டபாணி, விவசாய அணி வாவிட
மருதூர் குமார், அண்ணா தொழிற்சங்கம் முன்னாள் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மாவட்டச் செயலாளர் ராஜாங்கம், இணைச் செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர் சின்னன்,இனைச் செயலாளர் பாண்டி, சசிகுமார், பொருளாளர் ராமச்சந்திரன், மற்றும் கணேசன் குருவித்துறை தண்டாயுதம், மாணவரணி துணைச் செயலாளர் ராஜா வெல்டிங் மாரி , ஜேசிபி சுரேஷ், பத்தாவது வார்டு மணிகண்டன், ஏழாவது வார்டு எஸ்பி மணி, ஜெயபிரகாஷ், கண்ணுச்சாமி, முன்னாள் கவுன்சிலர் பெருமாள், பேட்டை மாரி, சுரேஷ் ராஜா, முத்துக்குமார் ,கண்ணன் ,பாலா மற்றும்பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள்மணி நன்றி கூறினார்.