கொடைக்கானலில் வாலிபரை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 3 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறையில் குதிரை மேய்வது தொடர்பான தகராறில் ராமர் (26) என்ற வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரகு (எ) ராகவேந்திரன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் (PCR Court)-த்தில் பூங்கொடி, ஜெயபால், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேர் சரணடைந்தனர்.




