• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்..,

Byமுகமதி

May 21, 2026

21.5.2026. முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் துரை. திவியநாதன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆலங்குடி தமிழ்ச்செல்வன், மாநகரத் தலைவர் பாருக், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சூர்யா பழனியப்பன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் தனபதி, கறம்பக்குடி ஞானசேகரன், வீரையா கந்தர்வகோட்டை வட்டார தலைவர் மாயக் கண்ணன் குன்றாண்டார்கோவில் வட்டாரத் தலைவர் சங்கிலி முத்து, சண்முகம் கீரனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பவுல் ராஜ் மாவட்ட கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வேங்கை அருணாசலம் சிவக்குமார் செம்பை மணி வீ. தமிழ்ச்செல்வன் திருக் கட்டளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயபாலன் பழனிசாமி பாலாண்டார் ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் ( டவுன் ஹால்) இருந்து காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் பேரணியாக வடக்கு ராஜவீதி கீழராஜவீதி வழியாக புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில் அமைக்கப்பட்ட அமரர் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் அன்னவாசல் வட்டார தலைவர்கள் தமிழ்ச்செல்வன் சுப்பிரமணியன் செல்வராஜ் நகர தலைவர் அப்துல் கரீம் சஞ்சய் காந்தி முக்கனாமலைப்பட்டி முகமது கனி ரபீக் வழக்கறிஞர் அஜ்மல் கான் ஜெயபாலன் ஜெய வடிவேல் காந்தி பழனிசாமி கீரனூர் நகர தலைவர் பாஸ்கர் திருவப்பூர் மணி ஆறுமுகம் நாச்சிமுத்து மாவட்ட ஓபிசி அணி தலைவர் ஆனந்தன் செயலாளர் ஆறுமுகம் மக்கள் கோபால் டிரைவர் சிவா மாவட்ட செயலாளர் எம் ஏ கே சேட்டு மகளிர் அணி தலைவர் கவுரி வாராப்பூர் ஜெய்சங்கர் ஆதனக்கோட்டை தமிழ் வாணன் மணி வேல் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜகோபால் கீரனூர் கவுன்சிலர் செல்வம் பெருங்களூர் முத்து சுப்பிரமணியன் மாத்தூர் நடராஜன் திருமலை ராய சமுத்திரம் கணேசன் சோலை கவின் குமார் வடவாளம் பாஸ்கர் முத்துக் கருப்பன் பாலன் நகர் அரங்குளவன் அடைக்கலம் அடப்பன்கார சத்திரம் ராஜேந்திரன் மீனாட்சி சுந்தரம் ராஜசேகர் எம் ஏ கே சையது அப்துல் அருள் முருகன் சகாய ராஜ் காமராஜரபுரம் ராமச்சந்திரன் போஸ் நகர் சரவணன் தாமரை செல்வன் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் 59. ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு விஸ்வநாதன் எம் எல் ஏ மற்றும் ராஜேஷ் குமார் எம் எல் ஏ ஆகியோர் பொறுப்பேற்ற தற்கு புதுக்கோட்டை அண்ணா சிலை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் பட்டாசுகள் வெடிகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.