• Tue. Apr 23rd, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 2, 2023

சிந்தனைத்துளிகள்

எதுவும் சில காலம்தான், எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால்
ஏமாற்றம் பெரிதாக தெரியாது.

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்,
கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான்,
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம்
யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்
நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது
பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..
இப்போது இருக்கும் உங்கள் நிலைதான் முடிவான ஒன்று என நினைக்காதீர்கள்.
இதைவிட மிகச்சிறந்தது உங்களை நோக்கி வர காத்திருக்கிறது.

அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுத் தர முடியாது..
அதற்கு பல தோல்விகளும், துரோகங்களும் தேவைப்படுகின்றன..!

வாழ்வின் சிறந்த நாட்களை அடைய,
சில மோசமான நாட்களோடு போராட வேண்டும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *