

சிந்தனைத்துளிகள்
ஒரு பெரிய நாட்டின் மன்னன்.. ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..
காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..
மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்..
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..
மன்னனால் தூங்க முடியவில்லை.. உணவும் குறைந்து விட்டது.. மன்னன் பொலிவு இழந்தான்..
மன்னனோடு சேர்ந்து நாடும் களை இழந்தது..
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார்..
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்..
“இது மிகவும் அபூர்வ வகை பூச்சி.. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது..”
இங்கிருந்து மூவாயிரம் மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்..
இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.. எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.. அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்..”
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்..
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது..
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது..
மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி..
மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.. நன்றாக உண்டான்.. பழைய பொலிவு திரும்பி விட்டது..
அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்..
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்..
“குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!”
”துறவி புன்னகை பூத்தார்”..
“பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?” மன்னனின் செவிக்குள்..
”அதுதான் இல்லை.. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம்.. சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்.. இல்லை, வெளியே வந்திருக்கும்..
அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது..
அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.”
“குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே.
“மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்..
அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..
தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்.”
”அந்த மூலிகை?”
“நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான்..
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்..
பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.. மன்னன் நம்பி விட்டான்.. அவன் நோயும் தீர்ந்தது..”
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன..
காதில் நுழைந்த பூச்சி செத்து விட்டது.. மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது..
இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா நான் பெரிய ஆளாகியிருப்பேன்” என்று எத்தனை பேர் ஜல்லியடிக்கிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான்..
பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.. அது நம் மனதில் இருக்கிறது.. பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது..
ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம். சரிதானே.
- உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் வசூல் – கோவில் நிர்வாகம் தகவல்…!!!உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 … Read more
- உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..,உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 255: நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,அல்கு பெரு நலத்து, அமர்த்த … Read more
- படித்ததில் பிடித்தது ஊக்கமூட்டும் பொன்மொழி 1. “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?ஆமை 2. எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது? ஒட்டகச்சிவிங்கி … Read more
- குறள் 533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு பொருள் (மு.வ): மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் … Read more
- தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்..,பஞ்சாப் மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக … Read more
- அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து, கல்வித்துறை இயக்குனர் முனைவர், க.அறிவொளி நேரடி ஆய்வு.மாணவர்களின் தனித்திறமையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் விதமாக தலா 100 ரூபாய் மற்றும் பேனா பரிசு வழங்கி … Read more
- தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்…தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத … Read more
- கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு..,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி … Read more
- குடிதண்ணீருடன் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி..,சென்னை வேளச்சேரி கண்ணபிரான் தெருவில் கார்த்திகேயன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இந்த குடியிருப்பில் சுமார் 12 … Read more
- மதுரை வைகையாற்றில் அடையாளம் தெரியாத நபரை கொலை செய்தவர்களுக்கு போலீசார் வலை வீச்சு…மதுரையில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத … Read more
- மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி…திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கே.ராஜதானி கோட்டை, சேர்ந்த துரைப்பாண்டி மாற்றுத்திறனாளி. இவரது விவசாய நிலத்திற்கு செல்லும் … Read more
- தென்கரை ஊராட்சியில் தீவிர டெங்கு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர டெங்கு தடுப்பு … Read more
- BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான … Read more
