பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன.
இவர் வெகுநாளாக தலைமறைவாகியிருந்த நிலையில், குணாவை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தது. இதனை அடுத்து அவரது மனைவி எல்லம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது கணவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாகக் கூறிய அவர், படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடையும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த மாதம் படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், கூட்டாளிகள் மூலம் படப்பை குணா குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, அவரின் கூட்டாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டினர்.
இந்த நிலையில் முக்கிய கூட்டாளியான மாம்பாக்கம் பிரபுவையும் அவருக்கு உதவிகள் செய்துவந்த போந்தூர் சேட்டுவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால் படப்பை குணாவின் கூட்டம் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
- திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்இன்னும் 4 ஆண்டுகள்நடைபெற உள்ள திமு.க ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது ” , எம்எல்ஏவுமான […]
- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குசிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக […]
- தி கிரே மேன் ட்ரெய்லர்… கடுப்பான தனுஷ் ரசிகர்கள்…2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை ஹீரோவாக அறிமுகமானவர் […]
- மதுரையில் ஜூன்.4-5ம்தேதிகளில் துறவியர் மாநாடுமதுரையில் வருகின்ற ஜூன் 4 மற்றும் 5ம் தேதி துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு […]
- வெல்கம் பேக் மோடி சொல்லவேண்டிய நிலையில் திமு.க உள்ளது.-பாஜக மாநில செயலாளர் பேட்டிதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் […]
- ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்புஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு […]
- இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைதுகழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது […]
- காங்கிரசில் இருந்து விலகிய கபில்சிபில்-சமாஜ்வாதியில் இணைந்தார்காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், […]
- 10ம் வகுப்புபடத்தால்போதும் ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் உடனடி வேலை!மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்டிரீசியன் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், […]
- படப்பிடிப்பை முடித்து சென்னை வந்தார் நடிகர் விஜய்…நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. […]
- கண்கள் பளிச்சிட:முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, […]
- பட்டர் சிக்கன்:தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, […]
- நாளை மறுநாள் பூமிக்கு அருகே வரும் விண்கல் -ஆபத்து ஏற்படுமா?பூமியை நெருங்கும் சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய விண்கல் ஆபத்து எற்படுத்துமா என்பது […]
- சிந்தனைத் துளிகள்• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே […]
- பொது அறிவு வினா விடைகள்டஜன் என்றால் என்ன?12 பொருட்கள் குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்) ஸ்கோர் என்றால் […]