சமூக சேவகரான அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எச்சரித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழலுக்கு எதிரான ஒரு மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்தவர் அன்னா ஹசாரே.
அப்போது அவர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சூழலில் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஒயின் விற்பனை தொடர்பாக மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள உத்தரவு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாகக் கடந்த பிப.3ஆம் தேதியே மகாராஷ்டிர அரசுக்குக் கடிதம் எழுதியதாகவும் இருப்பினும், இதுவரை அதற்கு அரசு பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட கடைகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அம்மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்திருந்தது. இந்த புதிய சட்டத்தின்படி 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் வைன் மது வகைகளை விற்பனை செய்யலாம். இங்கு விற்பனை செய்யப்படும் வைனில் குறைந்த அளவு ஆல்கஹால் இருக்க வேண்டும் என்றும் இதற்காக ஆண்டுக்கு ரூ 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
மகாராஷ்டிரா அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மகாராஷ்டிர அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால் இந்த நினைவூட்டல் கடிதத்தை அனுப்புகிறேன். சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி வழங்க மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்த முடிவு அரசுக்குத் துரதிர்ஷ்டவசமானது, வரும் தலைமுறையினருக்கு இது ஆபத்தானது.
இந்த முடிவை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் (அஜித் பவார்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன், ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த உத்தரவை ரத்து செய்யவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளேன். போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து குணமடைய வைப்பது தான் அரசின் கடமை. ஆனால், வருமானத்தைக் கருத்தில் கொண்டு அரசு இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
அதேபோல அம்மாநில எதிர்க்கட்சியான பாஜகவும் இதைக் கடுமையாகச் சாடியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில். “சிவசேனா தலைமையிலான அரசு மகாராஷ்டிராவை மத்ய-ராஷ்டிராவாக (மதுபான மாநிலம்) மாற்றும் முயற்சி தான் இது. அவர்களுக்கு மதுபான தொழிலின் மீதான காதலால் தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பு மதுவிலக்கு அமலில் இருந்த சந்திரபூர் மாவட்டத்திலும் இவர்கள் மதுவிலக்கை நீக்கியுள்ளனர். கலால் வரியையும் பாதியாகக் குறைத்துள்ளனர்” என்று சாடியிருந்தார்.
- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]