நடிகை தேவதர்ஷினி சீரியலில்தான் தனது கேரியரை துவக்கினார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். இந்நிலையில் தனக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்த சீரியலில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளது, இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!
நடிகை தேவதர்ஷினி டிவி தொகுப்பாளராக தனது கேரியரை துவக்கினார். இந்த புகழ் வெளிச்சத்தை அடுத்து சன் டிவியின் மர்மதேசம் சீரியலில் தான் முதல்முறையாக நடிகையாக நடித்தார். இந்தத் தொடர் அவருக்கு பரவலான அங்கீகாரத்தை கொடுத்தது. தொடர்ந்து சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் அவரை பட்டித் தொட்டியெல்லாம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து அவர் நடித்த ரமணி vs ரமணி தொடர் அவரை புகழின் உச்சிக்கே இட்டுச் சென்றது. இந்தத் தொடரில் அப்பாவித்தனமாக இவர் செய்யும் சேட்டைகளும், இவரது சைகைகளும், அந்த சீரியலுக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது!
தொடர்ந்து பார்த்திபன் கனவு படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்திருந்தார். இதிலும் வேலையில்லாத கணவனை திருத்த இவர் மேற்கொள்ளும் முயற்சிகள், விவேக்கின் காமெடிகளுக்கு ஈடுகொடுத்து நடித்திருந்த வேடம் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து இவர் அடுத்தடுத்து சிறப்பான கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளாவுடன் இணைந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தவை. இதேபோல 96 படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்து புகழ் வெளிச்சம் பெற்றார்.
தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவதாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சன் டிவியின் பிரபல தொடரான ரமணி vs ரமணி தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முந்தைய சீசன் தேவதர்ஷினிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த நிலையில், அவர் மூன்றாவது சீசனிலும் அவர் நடித்து பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் நடித்த தி பேமிலி மேன் 2 சீரிசில் தேவதர்ஷினியின் கேரக்டர் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால்தான் ரமணி vs ரமணி தொடரில் நடிக்க தேவதர்ஷினி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]