நடிகை தேவதர்ஷினி சீரியலில்தான் தனது கேரியரை துவக்கினார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். இந்நிலையில் தனக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்த சீரியலில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளது, இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!
நடிகை தேவதர்ஷினி டிவி தொகுப்பாளராக தனது கேரியரை துவக்கினார். இந்த புகழ் வெளிச்சத்தை அடுத்து சன் டிவியின் மர்மதேசம் சீரியலில் தான் முதல்முறையாக நடிகையாக நடித்தார். இந்தத் தொடர் அவருக்கு பரவலான அங்கீகாரத்தை கொடுத்தது. தொடர்ந்து சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் அவரை பட்டித் தொட்டியெல்லாம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து அவர் நடித்த ரமணி vs ரமணி தொடர் அவரை புகழின் உச்சிக்கே இட்டுச் சென்றது. இந்தத் தொடரில் அப்பாவித்தனமாக இவர் செய்யும் சேட்டைகளும், இவரது சைகைகளும், அந்த சீரியலுக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது!
தொடர்ந்து பார்த்திபன் கனவு படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்திருந்தார். இதிலும் வேலையில்லாத கணவனை திருத்த இவர் மேற்கொள்ளும் முயற்சிகள், விவேக்கின் காமெடிகளுக்கு ஈடுகொடுத்து நடித்திருந்த வேடம் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து இவர் அடுத்தடுத்து சிறப்பான கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளாவுடன் இணைந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தவை. இதேபோல 96 படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்து புகழ் வெளிச்சம் பெற்றார்.
தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவதாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சன் டிவியின் பிரபல தொடரான ரமணி vs ரமணி தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முந்தைய சீசன் தேவதர்ஷினிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த நிலையில், அவர் மூன்றாவது சீசனிலும் அவர் நடித்து பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் நடித்த தி பேமிலி மேன் 2 சீரிசில் தேவதர்ஷினியின் கேரக்டர் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால்தான் ரமணி vs ரமணி தொடரில் நடிக்க தேவதர்ஷினி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]