கனடா தலைநகர் ஒட்டாவாவின் முக்கியத் தெருக்கள் அனைத்தையும் லாரி ஓட்டுநர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கு, திரும்பும் பக்கமெல்லாம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம்தான் கனடா தலைநகர் ஒட்டாவாவை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. ஹாரன்கள், சைரன்கள், பட்டாசுகள் மூலம் அடிக்கடி ஒலியெழுப்பி போராட்டத்தைக் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள் லாரி ஓட்டுநர்கள். 10 நாள்களுக்கு மேலாக நடக்கும் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு. திணறிவருகிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கனடாவில் தொற்றுப் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, பொது இடங்களுக்கு வருபவர்களும், பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களும் கட்டாயம் தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். லாரி ஓட்டுநர்கள் பயணம் மேற்கொள்ளவும் தடுப்பூசிச் சான்றிதழ் அவசியம்!' என்று கனடா அரசு உத்தரவிட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, லாரி ஒட்டுநர்கள் பலரும் இதற்கு எதிராக குரல்கொடுக்கத் தொடங்கினர். கடந்த ஜனவரி 29-ம் தேதி அன்று, கனடா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் தலைநகர் ஒட்டாவாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். அன்றிலிருந்து, தினசரி பல நூறு லாரி ஓட்டுநர்கள் ஒட்டாவாவை அடைந்தனர். ஒட்டாவாவின் சாலையோரங்களில் கூடாரம் அமைத்து போராட்டங்களில் ஈடுப்பட்டனர். கட்டாயத் தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். முதலில், லாரி ஓட்டுநர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், நாள்கள் செல்லச் செல்ல கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனநிலையிலிருப்பவர்களும் கலந்துகொள்ளத் தொடங்கினர். இதனால் கனடா அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்தது. முன்னதாக,
தலைநகரில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தோடு ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார்’ எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாள்களாக ஒட்டாவாவில் நடந்துவரும் இந்தப் போராட்டத்தால் கனடா அரசுக்குப் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மிகப் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. லாரி ஓட்டுநர்களோ, `கட்டாய தடுப்பூசி உத்தரவை நீக்கிக் கொண்டால் மட்டுமே, போராட்டத்தைக் கைவிடுவோம்’ என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு.
இந்த நிலையில், போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தி உத்தரவிட்டார் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்ஸன். “போராட்டக்காரர்களைவிட கவால்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், போராட்டங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒட்டாவா நகரத்தை மீட்டெடுக்க அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார் ஜிம் வாட்ஸன்.
இதையடுத்து கனடா நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று வலியுறுத்தியதோடு லாரி ஓட்டுநர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிப்ரவரி 8-ம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில்,
கனடா மக்களுக்குப் போராட்டம் நடத்தவும், தங்கள் அரசாங்கத்துடன் உடன்படாமல் இருக்கவும், தங்கள் குரல்களை அரசாங்கத்துக்குக் கேட்கச் செய்யவும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். ஆனால், நமது பொருளாதாரத்தையோ, ஜனநாயகத்தையோ அல்லது நமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க அவர்களுக்கு உரிமை இல்லை. அது நிறுத்தப்பட வேண்டும்!” என்று பதிவிட்டிருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]